அரச மொழித் தினத்தினைப் பிரகடனப்படுத்த அமைச்சரவை அனுமதி!
Thursday, May 23rd, 2019
அரச மொழித் தினம் மற்றும் அரச மொழி வாரமொன்றினை பிரகடனப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய, ஜூன் மாதம் 3ஆம் திகதி அரசமொழி தினமாக பிரகடனப்படுத்தவும் அன்றைய தினம் முதல் ஒரு வாரத்திற்கு அரச மற்றும் அரச சார்பற்ற பிரிவினரின் முழுமையான பங்களிப்பின் கீழ் அரச மொழிக் கொள்கையை பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்தும் நோக்காக கொண்ட வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சிங்கள மற்றும் தமிழ் மொழியை அரச மற்றும் தேசிய மொழியாகவும் ஆங்கில மொழி இணைப்பு மொழியாகவும் பயன்படுத்தப்படுகின்றது.
Related posts:
ஆணின் சடலம் மீட்பு
மறு அறிவித்தல் வரை அனைத்து பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளன - பரீட்சைகள் ஆணையாளர்!
ஏற்றுமதி சார்ந்த உற்பத்திப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் கருத்தை யதார்த்தமாக்க இலங்கை கைத்தொழில்...
|
|
|


