அரச துறையில் மீண்டும் இவ்வருடம் சம்பளத்தை அதிகரிக்க முடியாது – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Sunday, July 7th, 2024

அரசாங்க துறையில் மீண்டும் இவ்வருடம் சம்பளத்தை அதிகரிக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஊவா மாகாண சமூக பொலிஸ் குழுக்களை வலுவூட்டுவதற்கான முதல் அமர்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் வெல்லவாய பொது மைதானத்தில் இன்று  உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் தேர்தல் காலம் நெருங்கி வருவதால் அதனை செய்ய முடியாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, அடுத்த வருட வரவு செலவுத்திட்டத்தின் ஊடாகவே சம்பளத்தை அதிகரிக்க முடியும் என சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


25 வீதமான தனியார் பேருந்துகளில் மண்ணெண்ணை பயன்படுத்தப்படுகின்றது - சக்திவள அமைச்சர் உதய கம்மன்பில கு...
ஐந்தாண்டு விடுமுறை சுற்றறிக்கை ஆசிரியர்கள், சுகாதார துறையினருக்கு பொருந்தாது - பொது நிர்வாக அமைச்சின...
சாதாரண தரப் பரீட்சையை நாளை ஆரம்பம் - அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்...