அரச ஓய்வூதியதாரர்களுக்கான மேலதிக கொடுப்பனவுடன் மேலதிகமாக 6000 ரூபா – நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!

Tuesday, August 13th, 2024

அரச சேவையில் உள்ள அனைத்து ஓய்வூதியர்களுக்கும் எதிர்வரும் அக்டோபர் மாத கொடுப்பனவுடன், மேலதிகமாக 6000 ரூபாவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அண்மையில் அமைச்சரவையில் முன்மொழியப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் செப்டெம்பர் மாத நிலுவைத் தொகையான 3,000 ரூபாவுடன் ஒக்டோபர் மாதம் ஓய்வூதியம் 6,000 ரூபாவாக வழங்கப்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்பிறகு, நவம்பர் மாதம்முதல் இதுவரை கிடைத்த ரூ.2,500 உதவித்தொகையுடன், புதிதாக வழங்கப்படும் இடைக்கால உதவித்தொகையான ரூ.3,000 ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த மேலதிக கொடுப்பனவான 3,000 ரூபாவை வழங்குவதற்கு நிதி அமைச்சும் முழுமையான எழுத்துமூல அனுமதியை வழங்கியுள்ளதால், அரச நிர்வாக அமைச்சு இதற்கான சுற்றறிக்கையை வெளியிட வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், செப்டெம்பர் மாதம் அந்த கொடுப்பனவை வழங்குவதற்கு தேர்தல் ஆணைக்குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதன்படி, ஒக்டோபர் மாதம் இடைக்கால கொடுப்பனவாக 3,000 ரூபாவும், செப்டெம்பர் மாத நிலுவைத் தொகையான 3,000 ரூபாவுடன் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஒக்டோபர் மாத ஓய்வூதியத்துடன் 6,000 ரூபா நிச்சயம் கிடைக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

000

Related posts:


பிலியந்தளை தாக்குதல் - அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் சாகல ரட்நாயக்கா பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவு...
யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களிலும் துணைக் கொத்தணிகள் - அதிகாரிகள் எச்சரிக்கை!
இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக தனக்கே உரிய தனித்துவத்தோடு தனது குரலை ஓங்கி ஒலிக்கச் செய்த பெரும...