அரசியல் நெருக்கடியை தீர்க்க விரைந்து செயற்பட வேண்டும் – மெல்கம் காதினல் ரஞ்சித் ஆண்டகை!
Tuesday, February 20th, 2018
நாட்டில் தற்போது காணப்படும் அரசியல் நெருக்கடியை தீர்ப்பதற்கு அனைத்து அரசியல் தலைவர்களும் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மெல்கம் காதினல் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.
அதிகார மோதலில் ஈடுபடுவதை விட்டு நாட்டு மக்களை பற்றி சிந்தித்து அரசியல் நெருக்கடியை தீர்த்து வைக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பொரள்ளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் பேசும் போதே மெல்கம் காதினல் ரஞ்சித் ஆண்டகை இந்த கோரிக்கையை முன்வைத்தார்.
அத்துடன் போதைப் பொருள் பயன்பாட்டில் இருந்து இளைஞர் சமூகத்தை பாதுகாப்பதற்கு விஷேட வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Related posts:
நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்ட நகைகள் திருட்டு : உத்தியோகத்தர் தலைமறைவு!
ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றத்தில் இதுவரை 41 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கைது - பொலிஸ் ஊடக பிரிவு அ...
அரிசிக்கான விலையை நிர்ணயம் செய்யும் வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு – அமைச்சர் பந்துல குணவர்த்தன!
|
|
|


