அரசியல் கட்சிகள் பதிவு தொடர்பான பரிசீலனை அறிக்கை 18ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களிடம் கையளிப்பு!
Monday, May 10th, 2021
அரசியல் கட்சிகளை பதிவு செய்வது தொடர்பான பரிசீலனை அறிக்கை எதிர்வரும் 18 ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, நேர்முகத் தேர்வில் தெரிவான கட்சிகளின் பெயர்களை அறிக்கையொன்றின் ஊடாக வெளியிடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான நேர்முகத் தேர்வுகள் கடந்த சில நாட்களாக தேர்தல்கள் ஆணைக்குழு காரியாலயத்தில் இடம்பெற்றதுடன் அதில் 18 கட்சிகள் தகுதி பெற்றிருந்தன.
எவ்வாறாயினும், அதில் பெரும்பாலான கட்சிகள் நேர்முகத் தேர்வில் தேவையான காரணிகளை பூர்த்தி செய்யவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
2017 இந்து சமுத்திர மாநாடு நாளை ஆரம்பம்!
எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் பெற்றோலிய கூட்டுத்தாபனம் இதுவரை தீர்மானிக்கவில்லை - வலுசக்தி அமை...
இலவசங்களே பொருளாதாரம் வீழ்ச்சியடைய முக்கிய காரணம் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டு!
|
|
|


