அரசியலில் எனது எதிர்காலத்தை மக்கள் தீர்மானிப்பார்கள் – அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவிப்பு!

Thursday, March 18th, 2021

அரசியலில் தனது எதிர்காலத்தை மக்கள் தீர்மானிப்பார்கள் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய ஊடகவியலாளர் கிரண் ராய்க்கு வழங்கிய நேர்காணலிலேயே நாமல் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் இதன்போது, ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட விருப்பம் இருக்கிறதா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த நாமல் ராஜபக்ச குடும்ப அரசியலை தாம் விமர்சிப்பவர் என்றும் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பலப்படுத்துவதே தனது நோக்கம் என்றும் தங்கள் நாட்டில் குடும்ப அரசியல் உண்மையில் செயற்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: