அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பான குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் – ஜனாதிபதியின் செயலாளர் தெரிவிப்பு!
Monday, April 25th, 2022
அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பான குழுவின் அறிக்கை ஜனாதிபதி செயலகத்திற்கு கிடைத்துள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை ஜனாதிபதி பாராட்டியுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளரினது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கையை தீர்மானிக்கும் நோக்கில் அரசாங்கம் குறித்த அறிக்கையின் உள்ளடக்கங்களை ஆழமாக பரிசீலிக்கும் என ஜனாதிபதியின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
அந்தமானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ; இலங்கைக்கு பாதிப்பில்லை!
பிரதிநிதிகளை நியமிப்பதற்கான கால எல்லை நிறைவு!
அரசியல் நிபந்தனைகள் எதவும் இன்றி இலங்கைக்கு ஆதரவு - சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஜனாதிபதி ரணிலிடம் தெரி...
|
|
|


