அரசியலமைப்புச் சபையால் ஏற்படும் தாமதங்கள் குறித்து ஆராய்வதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழு – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு!
Thursday, November 23rd, 2023
உயர் பதவிகளுக்கான பெயர்களை அங்கீகரிப்பதில் அரசியலமைப்புச் சபையால் ஏற்படும் தாமதங்கள் குறித்து ஆராய்வதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
வரவு – செலவுத்திட்ட குழு விவாதத்தின் இரண்டாம் நாளான இன்று (23) பாதுகாப்பு மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தொடர்பான விவாதம் இடம்பெற்று வருகிறது.
இந்த நிலையில் பாராளுமன்றத்தல் கருத்துரைக்கையிலே ரணில் விக்கிரமசிங்க இந்த விடயத்தை தெரிவித்தார்.
அத்துடன், சட்டப் பேரவையின் பணிகளை சீர்குலைக்கும் வகையில் சில உறுப்பினர்கள் செயற்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
சொத்துப்பிரச்சனையே வண்ணார்பண்ணையில் நிகழ்ந்த குழந்தையின் கொலைக்கு காரணம்!
வெங்காய உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி...!
யாழ்ப்பாணத்தில் சீரற்ற காலநிலை - 216 குடும்பங்களைச் சேர்ந்த 758 பேர் பாதிப்பு - மாவட்ட அனர்த்த முகாம...
|
|
|


