அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலைத் தவிர வேறு எந்தத் தேர்தலும் இவ்வருடம் நடைபெறாது – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!
Tuesday, May 7th, 2024அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலைத் தவிர வேறு எந்தத் தேர்தலும் இவ்வருடம் நடைபெறாது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இன்றைய(07) பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் பிரசன்ன இதனை தெரிவித்தார்.
அதேவேளை உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்தை வற்புறுத்துவதன் மூலம் எதிர்க்கட்சிகள் இந்த தருணத்தில் அரசாங்கத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பில் தவறான கருத்தை நாட்டுக்கு முன்வைப்பதாகவும் அமைச்சர் பிரசன்ன இதன்போது சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
இன்று உயர்தரப் பரீட்சை ஆரம்பம்!
ஆஸ்பத்திரிக்குள் புகுந்து வெட்ட முயற்சி – பருத்தித்துறையில் நேற்று பரபரப்பு!
ஆள்கடத்தலை முறியடிக்க ஆளில்லா விமானங்களை இலங்கைக்கு வழங்கியது அவுஸ்திரேலியா!
|
|