அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கரங்களை பலப்படுத்த தயார் – நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் தெரிவிப்பு!
Friday, March 5th, 2021
யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காரியாலயத்தினை அனுராதபுரத்திற்கு இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் குறித்த காரியாலய இடமாற்றம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார், யாழ்ப்பாணத்திலுள்ள காணி சீர்திருத்த ஆணைக்குழு காரியாலயத்தினை இடமாற்றம் செய்வதை தடுத்து நிறுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு பக்கபலமாக ஆதரவளிக்க தாம் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாட்டிலிருந்து 3 வருடங்களில் டெங்கு முற்றாக ஒழிக்கப்படும்!
அறிவியல் நகரில் பொறியியல் பீடத்தினை நிறுவியவர் டக்ளஸ் தேவானந்தா – யாழ்.மாநகர சபை முன்னாள் முதல்வர்!
வடக்கின் சட்டத்தரணிகள் நாளை பணிப்புறக்கணிப்பு!
|
|
|


