அமைச்சர்கள் வெளிநாடு செல்லத் தடை உத்தரவு!
Friday, July 8th, 2016மக்களின் கோரிக்கைகளை அறிந்து அதனை நிவர்த்தி செய்யும் முகமாக அமைச்சர்கள் அனைவரினதும் வெளிநாட்டு பயணங்களை ஒரு மாத காலத்திற்கு இரத்து செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்ற குழுநிலை சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல பகுதிகளிலும் வற் வரி அதிகரிப்பிற்கு எதிரான ஆர்பாட்டங்கள் இடம்பெற்றுவருவதோடு பல கோரிக்கைகளையும் மக்கள் முன்வைத்துவருகின்றனர். குறித்த விடயங்கள்தொடர்பிலான தெளிவினை மக்களுக்கு வழங்க வேண்டியது அமைச்சர்களின் கடமையாகும்.
அதனால் அமைச்சர்கள் வெளிநாட்டு விஜயங்களை தவிர்த்து மக்களுடைய பிரச்சனைகள் தொடர்பில் ஆராய்ந்து அவர்களுக்கான தெளிவினை பெற்றுத்தர வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்
Related posts:
சிறைக்கைதிகளில் உள்ள உறவுகளுடன் பேச விசேட திட்டம் - இராஜாங்க அமைச்சர் லொஹான் தெரிவிப்பு!
தேவையான ஔடதங்கள் கையிருப்பில் - துறைசார் அமைச்சு அறிவிப்பு!
தேவையான எரிபொருள் இறக்குமதிக்கு ஏற்பாடு - பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு!
|
|