அமெரிக்க கடற்படை கப்பல் இலங்கை வருகை!
Wednesday, October 4th, 2017
கடற்படை சார் தயார்நிலைக்கான ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி நடவடிக்கைகளில் கலந்துகொள்வதற்காக அமெரிக்க கடற்படையின் லுவிஸ் மற்றும் கிளார்க் கப்பல் இலங்கை வந்தடைந்துள்ளது.
திருகோணமலை துறைமுகத்திற்கு நேற்று வந்தடைந்த இக்கப்பல் குறித்த பயிற்சியினை நிறைவு செய்தபின்னர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (06) நாட்டை விட்டு புறப்படவுள்ளது.210மீட்டர் நீளமும் 32 மீட்டர் அகலமும் உடைய இக்கப்பல் இரண்டு உலங்குவானூர்திகளை தரையிறக்கும் வசதிகளைக் கொண்டதாகும்.
இதேவேளை, இலங்கை கடற்படை மற்றும் அமெரிக்க பசுபிக் கடற்படை ஆகியவற்றினால் நடாத்தப்படும் 2017ஆம் ஆண்டுக்கான 23ஆவது கடற்படை சார் தயார்நிலைக்கான ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி நடவடிக்கைகள் நேற்று திருகோணமலையில் ஆரம்பமானது குறிப்பிடத்தக்கது.
Related posts:
வவுனியா மன்னகுளம் கிராமசேவையாளர் பிரிவுமக்கள் அடிப்படை வசதிகளைப் பெற்றுத்தருமாறு கோரிக்கை!
பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவிப்பு..!
தொழில் துறையில் முழுமையாக மாற்றங்களை ஏற்படுத்த புதிய தொழில்துறை சட்டம் - நடவடிக்கை எடுத்து வருவதாக...
|
|
|


