அபிவிருத்தி இலக்கை அடைய ஜேர்மன் முழுமையான உதவி?
Sunday, October 16th, 2016
இலங்கை அபிவிருத்தி இலக்கை அடைய மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு தமது அரசாங்கம் முழுமையான உதவிகளை வழங்கும் என இலங்கைக்கான ஜேர்மனிய தூதுவர் தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சருக்கும் ஜேர்மனிய தூதுவருக்கும் இடையில் நடந்த சந்திப்பில் தூதுவர் இதனை கூறியுள்ளார்.ஜேர்மனிய உயர்மட்ட வர்த்தகர்கள் இலங்கையில் முதலீடுகளை செய்ய எதிர்பார்த்துள்ளனர்.
இதனால், அவர்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் ராஜதந்திர மட்டத்திலான உதவிகளை வழங்குவது மிகவும் முக்கியமானது எனவும் ஜேர்மனிய தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை உலகில் முன்னணி நாடுகள் இலங்கையில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களில் முதலீடுகளை செய்ய ஏற்கனவே விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் இதற்கு ஜேர்மன் அரசின் உதவி இலங்கைக்கு அவசியம் எனவும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
மரண தண்டனை பட்டியலில் முதலாவதாக இருப்பது பெண் ?
கொரோனா தாக்குதல்: குடிவரவு குடியகல்வு திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!
இலங்கையின் துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறைகளை பாதுகாப்பதில் அர்ப்பணிப்புடன் இருப்பத...
|
|
|


