அனைவருக்கும் இலத்திரனியல் சுகாதார அட்டை-  அமைச்சர் ராஜித!

Friday, April 13th, 2018

இலங்கையர் அனைவருக்கும் இலத்திரனியல் சுகாதார அட்டைகள் வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 2020ஆம் ஆண்டுக்குள் சுமார் 21 மில்லியன் இலத்திரனியல் சுகாதார அட்டைகளை விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

உலக சுகாதார தினமான கடந்த 07ஆம் திகதி இலத்திரனியல் சுகாதார அட்டைகளின் அறிமுக வைபவம் தாமரைத் தடாகத்தில் வைத்து நடைபெற்றிருந்தது.

இந்நிலையில், அனைவருக்கும் அவரவரின் நோய், சிகிச்சை விபரங்கள், இரத்த வகை போன்ற சுகாதார தகவல்களை உள்ளடக்கிய இலத்திரனியல் சுகாதார அட்டைகளை விநியோகிக்கசுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்த நடவடிக்கையை 2020ஆம் ஆண்டுக்குள் பூரணப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த அட்டை மூலம் நோயாளிகளுக்கு விரைவானதும், தரமானதுமான சுகாதார மற்றும் மருத்துவ சேவைகளை வழங்கக் கூடியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது

Related posts: