அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நெடுந்தீவு அருகே 9 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது!
Tuesday, July 25th, 2023இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 9 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவு அருகே நேற்று(24) இரவு இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டபோது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் 2 படகையும் அதிலிருந்த 9 மீனவர்களையும் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன்துறைக்கு அழைத்து வந்து விசாரணைகளுக்கு பின்னர் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
உள்ளூராட்சி மன்றங்கள் பற்றிய வர்த்தமானியை செயற்படுத்தும் காலம் ஒத்திவைப்பு
நுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு செயற்பாடுகள்!
யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தை பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வைபவ ரீ...
|
|