அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டும் இலங்கைக்கு செல்லவும் – தனது நாட்டு மக்களுக்கு பிரித்தானியா அறிவுறுத்து!
Thursday, September 23rd, 2021அத்தியாவசிய காரணங்களுக்காக மாத்திரம் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளுமாறு தமது நாட்டு மக்களுக்கு பிரித்தானியா அறிவித்துள்ளது.
இலங்கையை கொரோனா தொற்றின் சிவப்பு பட்டியலில் இருந்து நீக்குவதாக நேற்று பிரித்தானியா அறிவித்திருந்தது. இந்த நிலையிலேயே, பிரித்தானியர்கள் இலங்கைக்கு அத்தியாவசியக் காரணங்களுக்காக மட்டும் பயணிக்குமாறு பிரித்தானியாவின் வெளியுறவு மற்றும் பொதுநலவாயச் செயலகம் அறிவுறுத்தியுள்ளது.
குறுகிய அறிவிப்பின் பேரில் இலங்கையில் பயணத்தடைகள், ஊரடங்கு சட்டம் என்பன ஏற்படுத்தப்படும் என்பதோடு, விமானப் பயணங்களிலும் மாற்றம் ஏற்படக்கூடும் எனவும் பிரித்தானியா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
அரசியலமைப்பு பணிகள் தடைப்படவில்லை : லால் விஜேயநாயக்க
பூநகரி பிரதேசமாதர் அமைப்புகளுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் தளபாடங்கள் வழங்கிவைப்பு!
வெளியானது அதிவிசேட வர்த்தமானி - பலத்த இராணுவ பாதுகாப்புடன் அலரி மாளிகையில் இருந்து வெளியேறினார் முன்...
|
|