அதிவேக நெடுஞ்சாலை சாரதிகளுக்கு புதிய சட்டம் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவிப்பு!
 Saturday, January 29th, 2022
        
                    Saturday, January 29th, 2022
            
அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனம் விபத்துக்குள்ளானால், அதனை சுயமாக சரி செய்யக் கூடாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அவ்வாறான சந்தர்ப்பத்தில், அவர்கள் முதலில் செய்ய வேண்டியது, வாகனத்தை வீதியின் பாதுகாப்பு வலயத்துக்கு அகற்றி, உடனடியாக 1969 அதிவேக நெடுஞ்சாலை சேவை இலக்கத்துக்கு அழைத்து அவர்களின் சேவைகளை பெற்றுக்கொள்ளுமாறும் அவர் கூறியுள்ளார்.
மாறாக, விபத்துகளை தாங்களாகவே சரி செய்ய முயற்சிக்கும் சாரதிகள் மற்றும் உதவியாளர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (29) காலை இடம்பெற்ற விபத்து தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிடும் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
வாகனத்தின் நிறம், உருவத்தை மாற்றியமைத்திருந்தால் தண்டம், அநேக சாரதிகளுக்கு சட்டமுறைமை தெரியாமல் உள்ள...
ஊரடங்கு உத்தரவின் போது பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து வாகனங்களையும் விடுவிக்க தீர்மானம்!
நெல் கொள்வனவு தொடர்பில் நாளை மறுதினம் விசேட கலந்துரையாடல் - விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு...
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        