அதிபர் வெற்றிடங்களை நிரப்ப ஏற்பாடு!
Saturday, January 5th, 2019தேசிய பாடசாலைகளில் காணப்படும் அதிபர்கள் வெற்றிடங்கள் இந்த மாத இறுதிக்குள் நிரப்பப்படும் என்று கல்வி அமைச்சுத் தெரிவித்துள்ளது.
நாட்டில் தற்போது 302 தேசிய பாடசாலைகளில் பதில் அதிபர்களே கடமையாற்றுகின்றனர். அந்தப் பாடசாலைகளுக்கு அதிபர்களை நியமிப்பதற்கான நேர்முகப் பரீட்சைகள் முடிந்துள்ளன என்று அமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன தெரிவித்துள்ளார்.
நேர்முகப் பரீட்சையில் தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர்ப் பட்டியல் எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் அரச சேவை ஆணைக்குழுவுக்கு அனுப்பப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Related posts:
தேசிய நல்லிணக்கம் என்பது சரணாகதி அரசியல் அல்ல - ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன்!
கணிதப்பாட வினாத்தாளுக்கு சலுகை!
யாழ்.பொது நூலகம் தீக்கிரையாகி இன்றுடன் 41 ஆண்டுகள் நிறைவு!
|
|