அதிபர் பதவிக்கான விண்ணப்பம் கோரல்!
Saturday, June 16th, 2018வடமராட்சி வலயத்தில் வெற்றிடமாகவுள்ள யா.இமையாணன் அ.த.க.வித்தியாலயத்தின் (வகை-11) அதிபர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. கீழ்வரும் தகைமையுடைய அதிபர்கள் குறித்த பாடசாலைக்கான அதிபர் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பதாரி பின்வரும தகைமைகளைக் கொண்டிருத்தல் வேண்டும்
- இலங்கை அதிபர் சேவையில் தரம் 2,3 தரமுடையவர்களாக இருத்தல் வேண்டும்.
- இலங்கை அதிபர் சேவையில் அதிபராக கடமையாற்றாதவர்களும் இப்பதவிக்கு விண்ணப்பிக்க முடியும். (இவர்களுக்கு பிரிவு 4 பொருத்தமாகாது)
- வடமராட்சி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் நிரந்தரமாக சேவையாற்றுபவர்களாக இருத்தல் வேண்டும்.
- விண்ணப்பதாரி தற்போது கடமையாற்றும் பாடசாலையில் ஆகக்குறைந்தது மூன்று வருடங்கள் தொடர்ச்சியான சேவையினை ஆற்றியிருத்தல் வேண்டும்.
- விண்ணப்பதாரி ஆகக் குறைந்தது மூன்று வருடங்களுக்கு கடமையாற்றக் கூடிய வயதெல்லையை உடையவராக இருத்தல் வேண்டும்.
- இலங்கை அதிபர் சேவை தரம் 2 ஐ சேர்ந்தவர்களது பொருத்தமான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெறாத பட்சத்தில் மாத்திரம் தரம் 3 ஐச் சேர்ந்தவர்களது விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.
- விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி 29.06.2018 ஆகும்.
- விண்ணப்பதாரிகள் நேர்முகத் தேர்விற்கு தோற்றுதல் வேண்டும்.
- விண்ணப்பப்படிவங்களை வலயக்கல்வி அலுவலகத்தின் கல்வி நிர்வாகப் பிரிவில் பெற்றுக்கொள்ள முடியும் என வலயக்கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
Related posts:
சமூகம் விழிப்படைந்தால் மட்டுமே வாள்வெட்டுகளைக் குறைக்கலாம் - ரெஜினோல்ட் குரே !
வடக்கு கிழக்கு மலையகம் உள்ளிட்ட பகுதிகளில் சிறு பொருளாதார பயிர்ச்செய்கையை மேம்படுத்துவதற்கு நடவடிக்க...
பிரதமரின் பிறந்த தினத்தை முன்னிட்டு நாராஹேன்பிட அபயராமயவில் இடம்பெற்ற தானம் வழங்கும் புண்ணிய நிகழ்வு...
|
|