அதிபர் ஆசிரியர்கள் சுகயீன விடுமுறை போராட்டம் நாளை!
Tuesday, March 12th, 2019
அதிபர் – ஆசிரியர் சேவையில் காணப்படுகின்ற சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர் சேவை சங்கங்கள் நாளை சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட உள்ளன.
இதேவேளை நாட்டின் பிரதான நகரங்களில் நாளை எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் நடத்த உள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க கூறினார்.
22 ஆண்டுகளாக ஆசிரியர்-அதிபர் சேவை சம்பளத்தில் காணப்படுகின்ற முரண்பாட்டை தீர்க்காமை, 30 மாத காலத்தின் நிலுவைத்தொகையை வழங்காமை உள்ளிட்ட பிரதான காரணங்களை முன்வைத்து இந்த எதிரப்பு முன்னெடுக்கப்பட உள்ளது.
Related posts:
கூட்டமைப்பின் உறுப்பினருக்கு எதிராக வேலணை பிரதேச சபை உறுப்பினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!
குற்றச் செயல்களை கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் - வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் அவச...
தேர்தல்தினம் குறித்த வர்த்தமானி ஓரிரு வாரங்களில் அச்சிடப்படும் - தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!
|
|
|


