அதிபரது திடீர் இடமாற்றத்தை கண்டித்து மன்னார் முருங்கனில் பெற்றோர் ஆர்ப்பாட்டம்!
Friday, October 2nd, 2020மன்னார் – முருங்கன் ஆரம்பப் பாடசாலையின் அதிபரான அருட்சகோதரியின் திடீர் இடமாற்றத்தை கண்டித்து பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து இன்று காலைமுதல் பாடசாலைக்கு முன்பாக போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
பாடசாலையின் அதிபரை திடீர் என இடமாற்றம் செய்தமையை கண்டித்து, கடந்த 30ஆம் திகதி போராட்டம் மேற்கொள்ளப்பட்டு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
எனினும் இன்று வரை உரிய தீர்வு கிடைக்காத நிலையில், குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து இன்று காலை 8 மணிமுதல் பாடசாலைக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வேம்படி பாடசாலைக்கு முன்பாக உள்ள வீதி ஒரு வழிப் பாதையாக மாற்றம்!
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் டெங்கு நோயாளர்கள் பதிவாகும் எண்ணிக்கை வீழ்ச்சி - தேசிய டெ...
நீதித்துறைக்கு 20 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு - நீதி அமைச்சர் தெரிவிப்பு!
|
|
இரண்டு நிர்ணய விலைகளால் நுகர்வோருக்கு பயன் இல்லை - நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய அமைப்பு!
சுற்றுலாப் பயணிகளைக் கண்காணிக்க புதிய கணினி மென்பொருள் - சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பா...
போக்குவரத்து கட்டுப்பாடுகளை மேலும் இறுக்கமாக்க வேண்டியுள்ளது - பிரதி சுகாதார நோயாளிகளின் பணிப்பாளர் ...