அதிக பயணிகளை ஏற்றிச் சென்ற குற்றத்தில் 150 பேருந்துகளின் அனுமதிப் பத்திரம் இரத்து – போக்குவரத்து அமைச்சு அறிவிப்பு!
Wednesday, April 7th, 2021இருக்கைகளுக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச்சென்ற குற்றத்திற்காக 150 பேருந்துகளின் அனுமதிப் பத்திரம் இரத்து செய்யப்பட்டிருப்பதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் புதுவருடத்திற்காக தமது சொந்தவூர் சென்று திரும்பும் மக்களின் வசதிக்காக விசேட போக்குவரத்து வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறித்த அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் குறித்த திட்டதில் இலங்கை போக்குவரத்து சபையின் 1992 பேருந்துகளும், 21 புகையிரதங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் 1,800 தனியார் பேருந்துகளும் மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் குறித்த அமைச்சு அறிவித்துள்ளது.
அத்துடன் இந்த விசேட போக்குவரத்து சேவை எதிர்வரும் 9 ஆம் திகதியில் இருந்து 16 ஆம் திகதிவரை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மாகாண எல்லை நிர்ணயம் 9 ஆம் திகதி முதல் ஆரம்பம்
பட்டாசு கொளுத்த அனுமதி பெற வேண்டும் - பாதுகாப்பு அமைச்சு !
நாட்டின் தேசிய பாதுகாப்பை உயர்ந்தபட்ச அளவில் உறுதிப்படுத்த நடவடிக்கை - கைத்தொழில் துறை அமைச்சர் வீரவ...
|
|