அதிகரிக்கும் போலி தேரர்கள் – விசாரணைகளை ஆரம்பித்தது குற்றப் புலனாய்வு திணைக்களம்!
Tuesday, March 26th, 2024பௌத்த மத போதனைகளுக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் செயற்படும் போலி தேரர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
போலி தேரர்களின் செயற்பாடுகள் குறித்தும் மதம்சார் விடயங்களை பாதிக்கும் பல்வேறு சம்பவங்கள் குறித்தும் பௌத்த மதம் தொடர்பான பல்வேறு அமைப்புகளினால் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இந்நிலையில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் மற்றும் பௌத்த மத அலுவல்கள் ஆணையாளர் நாயகம் உள்ளிட்டோரின் முறைப்பாடுகளின் அடிப்படையில் இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவங்கள் தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மகாநாயக்க தேரர்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
A/L பரீட்சை : 80 மாணவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தம்..!
பொதுத்தேர்தலை கட்டம் கட்டமாக நடத்துவது குறித்து ஆலோசனை - தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப...
சுகாதார வழிமுறைகளை மீறிய 68 பேருந்துகளின் வீதி அனுமதிப்பத்திரங்கள் இரத்து - போக்குவரத்து இராஜாங்க அம...
|
|