அடுத்த வாரம்முதல் பாடசாலை செயற்பாடுகளை ஆராய செல்கின்றது கண்காணிப்புக் குழு – கல்வி அமைச்சு தெரிவிப்பு!
Wednesday, June 3rd, 2020அடுத்த வாரம்முதல் கல்வி அமைச்சின் குழுக்கள் பாடசாலைகளுக்கு சென்று கண்காணிப்பை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளின் நிர்வாகங்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது தொடர்பிலேயே இந்தக் கண்காணிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் கை கழுவும் வசதிகள் உள்ளிட்ட சுகாதார ஒழுங்குவிதிகள் தொடர்பில் அந்தக்குழுவினர் பரிசோதனைகளை மேற்கொள்ளவுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை பாடசாலைகளுக்கென்று பயன்படுத்துவதற்காக 10 ஆயிரம் உடல் வெப்பமானிகளை கொள்வனவு செய்ய கேள்விப்பத்திரம் கோரப்பட்டுள்ளது. இதன்படி 200 மாணவர்களுக்கு ஒரு உடல் வெப்பமானியை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ்ப்பான பிராந்திய பொலிஸ் பிரிவில் 62 பேர் பொலிசாரால் கைது!
வெளிவிவகார அமைச்சின் தூதரக சேவைகள் மீண்டும் ஆரம்பம் – முற்பதிவு அவசியம் என வெளிவிவகார அமைச்சு அறிவிப...
அரச வைத்தியசாலைகளினால் விநியோகிக்கப்படும் மருந்துசீட்டுகளுக்கு ஒசுசல ஊடாக இலவச மருந்து விநியோகம்!
|
|