அடுத்த வாரம்முதல் பாடசாலை செயற்பாடுகளை ஆராய செல்கின்றது கண்காணிப்புக் குழு – கல்வி அமைச்சு தெரிவிப்பு!
Wednesday, June 3rd, 2020
அடுத்த வாரம்முதல் கல்வி அமைச்சின் குழுக்கள் பாடசாலைகளுக்கு சென்று கண்காணிப்பை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளின் நிர்வாகங்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது தொடர்பிலேயே இந்தக் கண்காணிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் கை கழுவும் வசதிகள் உள்ளிட்ட சுகாதார ஒழுங்குவிதிகள் தொடர்பில் அந்தக்குழுவினர் பரிசோதனைகளை மேற்கொள்ளவுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை பாடசாலைகளுக்கென்று பயன்படுத்துவதற்காக 10 ஆயிரம் உடல் வெப்பமானிகளை கொள்வனவு செய்ய கேள்விப்பத்திரம் கோரப்பட்டுள்ளது. இதன்படி 200 மாணவர்களுக்கு ஒரு உடல் வெப்பமானியை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கையில் அதி சொகுசு மோட்டார் வாகனம் அறிமுகம்!
கொரோனாவை இனங்காணும் புதிய முறைமையை கண்டுபிடித்த இலங்கை பேராசிரியரின் ஆய்வுக் குழு!
500 டிப்ளோமா ஆசிரியர்களுக்கு விரைவில் நியமனம் - அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த அறிவிப்பு!
|
|
|
வெளிநாட்டு முதலீடுகளுக்கு வசதிகளைச் செய்வதற்காக முதலீட்டு முகாமைத்துவ குழுவை நியமிக்க அரசாங்கம் தீர்...
ஊரடங்கு உத்தரவை மீறி பயணித்த குற்றத்தில் இதுவரை 62 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கைது - பொலிசார் தெரிவிப...
உலகில் எந்த சக்தியாலும் இந்தியாவை அச்சுறுத்த முடியாது - பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரி...


