அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ கருத்து!

Saturday, June 29th, 2019

அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி தீர்மானம் மேற்கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மாத்தறை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டதன் பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர் ஒருவர் முன்னிறுத்தப்படுவார். எனினும், குறித்த விடயம் தொடர்பில் இதுவரை தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை.

இந்த நிலையில், அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படும் என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Related posts:

கொழும்பு உள்ளிட்ட ஏழு மாவட்டங்கள் அபாய வலயங்களாக அறிவிப்பு - தேசிய டெங்கு நோய் தடுப்பு பணியகத்தின் ப...
ஏப்ரல் 21 தாக்குதல்களுக்கு பொறுப்பை ஏற்றால் சலுகை – முன்னாள் ஜனாதிபதி மைத்திரியின் திட்டம் அம்பலம்!
இந்தியாவை அச்சுறுத்துவதற்காக இலங்கையை எவரும் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கமாட்டேன் - இந்திய வெளிவிவகார...

இரு கப்பல்களில் இருந்து நிலக்கரி, டீசல், விமான எரிபொருள் தரையிறக்கம் ஆரம்பம் - அமைச்சர் கஞ்சன விஜேசே...
இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் அடுத்த வாரம் இலங்கை வருவார் - ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெர...
நிறுவன சட்டவிதிகளின்படி சகல அரச ஊழியர்களும் செயற்பட்டால் சேவைகளை பெற்றுக்கொள்ள வரும் பொதுமக்களுக்கு ...