அடுத்த இரு வாரங்களுக்குள் பல்கலைக்கழகங்களுக்கான வெட்டுப்புள்ளி வெளியிடப்படும் – பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Wednesday, September 30th, 2020

இம்முறை பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படவுள்ள மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளியை இரு வாரங்களுக்குள் அறிவிக்கவுள்ளதாக பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன்  பல்கலைக்கழகங்களின் உப வேந்தர்களுடன் அது தொடர்பிலான கலந்துரையாடல் இடம்பெறும் எனவும் பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் ஜனிதா லியனகே தெரிவித்துள்ளார்.

தற்போது பல்கலைக்கழக உள்ளீர்ப்பிற்கான 36 தேர்வுகளின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.

2019 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் இம்முறை சுமார் 40,000 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்படவுள்ளனர்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் 10,000 மாணவர்கள் மேலதிகமாக சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் ஜனிதா லியனகே சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் குறிப்பாக மருத்துவ, பொறியியலாளர் உள்ளிட்ட பீடங்கள் சிலவற்றிற்கு உள்ளீர்க்கப்படும் எண்ணிக்கையில் இம்முறை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை ஏற்பது குறித்து இலங்கை ஆராய்வு - ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெர...
நல்லூர் மஹோற்சவ திருவிழாவில் குழந்தைகளை வைத்து யாசகத்தில் ஈடுபட தடை - மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழ...
தீர்வை தருவாரா? அல்லது தமிழ் மக்களை தீர்த்துக் கட்டுவாரா அனுரா? – சந்தேகம் வலுக்கிறது என்கிறார் ஈ.பி...