அடுத்த ஆண்டுக்கான ரி-ருவென்ரி உலகக்கிண்ண தொடர் இரத்து!
Monday, June 19th, 2017
அடுத்த வருடம் நடத்தப்படவிருந்த ரி-ருவென்ரி உலகக்கிண்ண தொடரை இரத்து செய்ய சர்வதேச கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.
முன்னணி அணிகள் தங்களுடைய இரு நாடுகளுக்கிடையேயான தொடரில் அதிக அளவில் விளையாட வேண்டியிருப்பதாலேயே இந்த சிக்கல் நிலைமை தோன்றியுள்ளதாக ஐ.சி.சி. விளக்கமளித்துள்ளது.
இதன்படி அடுத்த ஆண்டு நடத்தப்படவிருந்த ரி-ருவென்ரி உலகக்கிண்ண தொடரை 2020ஆம் ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த தொடர் நடத்தப்படும் இடம் இன்னும் முடிவுசெய்யப்படவில்லை.
இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் ரி-ருவென்ரி உலகக்கிண்ண தொடர், இதுவரை தென்னாபிரிக்கா (2007), இங்கிலாந்து (2009), மேற்கிந்திய தீவுகள் (2010), இலங்கை (2012), பங்களாதேஷ் (2014), இந்தியா (2016) ஆகிய நாடுகளில் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மேற்கிந்தியத் தீவுகளை 2ஆவது போட்டியிலும் வென்றது பாகிஸ்தான்!
ITSSL இனால் தேர்தல் ஆணையாளருக்கு அறிவிப்பு!
ஆறு துறைகளின் கீழ் கல்வி சீர்திருத்தம் - அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவி...
|
|
|


