H1N1 வைரஸ் தொற்று: இரு கர்ப்பிணி தாய்மார் மரணம்!

இன்புளூவன்ஸா H1N1 வைரஸ் தொற்றுக்குள்ளான தாய்மார்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா மற்றும் கெபத்திகொல்லாவ பிரதேசங்களில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக வைத்தியர் கபில ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
இன்புளூவன்ஸா H1N1 வைரஸ் தொற்று தற்போது இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எப்படியிருப்பினும் இந்த மரணங்கள் இன்புளூவன்ஸா H1N1 தொற்றின் காரணமாக ஏற்பட்டதென்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை என வைத்தியர் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார்.
அதற்கான பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் அறிக்கைகள் கிடைத்த பின்னர் இந்த மரணம் தொடர்பில் தகவல் வெளியிடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
ஒப்பந்தங்கள் அடிப்படையில் நியமனம் : போக்குவரத்து சபை ஊழியர்கள் குற்றச்சாட்டு!
ஓய்வூதியர்களின் செயற்பாடுகள் முன்மாதிரியாக அமைய வேண்டும் - யாழ். பிரதேச செயலர்!
வீழ்ச்சி கண்டிருக்கும் இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதில் விவசாயத்தின் மீது பாரிய நம்...
|
|