FCID யிற்கு புதிய பணிப்பாளராக பீ.கே.டி. பிரியந்த நியமனம் !
Thursday, January 19th, 2017
நிதி மோசடி விசாரணைப் பிரிவின் பணிப்பாளராக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பீ.கே.டி. பிரியந்த நியமிக்கப்பட்டுள்ளார். பாரிய நிதி மோசடிகள் அதிகார துஸ்பிரயோகம் மற்றும் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் நல்லாட்சி அரசாங்கத்தினால் நிதி மோசடி விசாரணைப் பிரிவு நிறுவப்பட்டது.
நிதி மோசடி விசாரணைப் பிரிவின் பணிப்பாளராக இதுவரை காலமும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சீ.ஏ.பிரேமரட்ன கடமையாற்றி வந்தார். சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சீ.ஏ.பிரேமரட்னவிற்கு பிரதிப் பொலிஸ் மா அதிபராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

Related posts:
விமான நிலையத்தில் 80 ஆயிரம் சிகரட்டுகளுடன் மூவர் கைது!
வியட்நாமில் இரத்தினக்கல் அகழ்வு செய்ய இலங்கையர்களுக்கு சந்தர்ப்பம்!
தபால் சேவையும் அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு!
|
|
|


