FCID யிற்கு புதிய பணிப்பாளராக பீ.கே.டி. பிரியந்த நியமனம் !
Thursday, January 19th, 2017நிதி மோசடி விசாரணைப் பிரிவின் பணிப்பாளராக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பீ.கே.டி. பிரியந்த நியமிக்கப்பட்டுள்ளார். பாரிய நிதி மோசடிகள் அதிகார துஸ்பிரயோகம் மற்றும் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் நல்லாட்சி அரசாங்கத்தினால் நிதி மோசடி விசாரணைப் பிரிவு நிறுவப்பட்டது.
நிதி மோசடி விசாரணைப் பிரிவின் பணிப்பாளராக இதுவரை காலமும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சீ.ஏ.பிரேமரட்ன கடமையாற்றி வந்தார். சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சீ.ஏ.பிரேமரட்னவிற்கு பிரதிப் பொலிஸ் மா அதிபராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
Related posts:
மீன் விலையில் வீழ்ச்சி!
15, 000 ஸ்புட்னிக் V கொவிட் தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்தன!
குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து ஆயராய்வு!
|
|