91 மில்லியன் பெறுமதியான அலுங்கு பட்டைகளுடன் மூவர் கைது!

Tuesday, November 14th, 2017

52 மில்லியன் ரூபா பெறுமதியான அலுங்கு என்ற அருகி வரும் விலங்கின் பட்டைகள் எனக் கூறப்படும் பட்டைகள் நான்கு உரப் பைகளில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

கல்பிட்டி தில்லையடி பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸார் அதனை கைப்பற்றியுள்ளனர்.130 கிலோ கிராம் எடைக்கொண்ட இந்த அலுங்கு பட்டைகள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து சீனாவுக்கு அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டிருந்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒரு கிலோ அலுங்கு பட்டை சுமார் 7 லட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது என கல்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லக்ஷ்மன் ரன்வலஆராச்சி தெரிவித்துள்ளார்.அலுங்கு பட்டைகளுடன் மூன்று சந்தேக நபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.ஒரு அலுங்கில் இருந்து 750 கிராம் பட்டைகளை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடியும் எனக் கூறப்படுகிறது.

Related posts:

வெளியானது அதிவிசேட வர்த்தமானி - பொது சுகாதார ஆய்வாளர்கள் இன்றி பொதுத் தேர்தலை நடாத்துவது சவாலானது – ...
நாம் ஒன்றுபடுவதை அரசியல்வாதிகள் விரும்பவில்லை - ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் தலைவர் கஞானசார தேரர...
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இன்றுமுதல 16ஆம் திகதிவரை விசேட பேருந்து தொடருந்து சேவைகள் - இலங்கை ...

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளமையால் ஒட்சிசன் தேவை மீண்டும் அதிகரிப்பு - வைத்தியர...
தேர்தலை நடத்தினால் அரச சேவையாளர்களுக்கு ஊதியம் வழங்குவது தாமதமாகும் - நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் ...
முதியோர் உதவித்தொகை, சுகயீன கொடுப்பனவு, விவசாய ஓய்வூதியம் போன்ற கொடுப்பனவு தொகையை அதிகரிக்க அரசாங்கம...