8 மீனவர்கள்  கைது!

Sunday, October 16th, 2016

சட்டவிரோதமான முறையில் மன்னார் கடற்ரைப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் 8 பேர் கடற்படையினரால் கைது​செய்யப்பட்டுள்ளனர்.

தடைசெய்யப்பட்ட வலை மற்றும் வெடிபொருட்களை பயன்படுத்தி, மன்னார் கடற்ரைப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்களே இவ்வாறு சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.

மீனவர்கள் பயன்படுத்திய டிங்கி படகுகள் இரண்டு, தடைசெய்யப்பட்ட வலைகள் இரண்டு, 66 ஜோடி துடுப்புகள், 330 கிலோகிராம் மீன் என்பவற்றையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் என்பன மன்னார் உதவி மீன்பிடி அத்தியட்சகரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

03-fishermen-boat-600-jpg

Related posts: