7 ஆண்டுகளில் மாநகரசபைக் காணி மூலம் ரூ.10 லட்சம் வருமானம்!

Wednesday, April 19th, 2017

நக­ரில் உள்ள சுப்­பி­ர­ ம­ணி­யம் பூங்­கா­வுக்கு எதி­ரில் உள்ள யாழ்ப்­பா­ணம் மாந­கர சபைக்­குச் சொந்தமான காணியை கடந்த 7 ஆண்­டு­க­ளில் வாடகைக்கு வழங்­கி­ய­தன் மூலம் 10  இலட்­சத்து 48 ஆயி­ரத்து 380 ரூபா வரு­மா­ன­மா­கக் கிடைக்­கப் பெற்­றுள்­ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

யாழ்ப்­பா­ணம் மாந­கர சபைக்­குச் சொந்­த­மான காணியை, 2010 ஆம் ஆண்­டி­லி­ருந்து 2017 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் திகதி வரை வாட­கைக்கு வழங்­கி­ய­தன் ஊடாக மாந­கர சபை பெற்­றுக் கொண்ட வரு­மா­னத்தை அறி­யத் தரு­மாறு தக­வல் அறி­யும் உரி­மைச் சட்­டத்­தின் ஊடா­கக் கோரிக்கை விடுக்­கப்­பட்­டிருந்­தது.

இதற்­குப் பதில் வழங்­கி­யுள்ள யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை, 2010 ஆம் ஆண்டு மற்­றும் 2013 ஆம் ஆண்­டு­க­ளில் வாட­கைக்கு வழங்­க­வில்லை. 2011 ஆம் ஆண்டு 3 தட­வை­கள் வாட­கைக்கு வழங்கிய­தன் ஊடாக ஒரு இலட்­சத்து 20 ஆயி­ரம் ரூபா­வும், 2012 ஆம் ஆண்டு 6 தட­வை­கள் வாடகைக்கு வழங்­கி­ய­தன் ஊடாக 2 லட்­சத்து 25 ஆயி­ரம் ரூபா­வும், 2014 ஆம் ஆண்டு 4 தட­வை­கள் வாட­கைக்கு வழங்­கி­ய­தன் ஊடாக 9 ஆயி­ரத்து 500 ரூபா­வும், 2015 ஆம் ஆண்டு 17 தட­வை­கள் வாடகைக்கு வழங்­கி­ய­தன் ஊடாக 2 லட்­சத்து 93 ஆயி­ரத்து 800 ரூபா­வும், 2016 ஆம் ஆண்டு 23 தடவை­கள் வாடகைக்கு கொடுத்­தன் ஊடாக 3 லட்­சத்து 53 ஆயி­ரத்து 280 ரூபா­வும், 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை­யில் 8 தட­வை­கள் வாட­கைக்­குக் கொடுக்­கப்­பட்டு 46 ஆயி­ரத்து 800 ரூபாவும் வரு­மா­ன­மா­கப் பெறப்­பட்­டுள்­ள­தா­கப் பதி­லில் குறிப்­பி­டப்­பட்­டுள்ளது.

இதே­வேளை பாது­காப்­புத் தரப்­பி­னர், அரச தலை­வர் செய­ல­கம் உள்­ளிட்ட பல்­வேறு தரப்­புக்­க­ளுக்கு 22 தட­வை­கள் வாடகை எது­வும் பெறப்படாமல் இடம் வாட­கைக்கு கொடுக்­கப்­பட்­டுள்­ள­மை­யும் வழங்­கி­யுள்ள பதி­லில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது

Related posts:


யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் புனரமைப்பு தொடர்பில் இந்தியாவுடன் புதிய உடன்படிக்கை - அமைச்சர்...
டெல்டா உள்ளிட்ட புதிய வைரஸ்கள் எதிர்வரும் நாட்களில் மேலும் தீவிரமடையும் : இராஜாங்க அமைச்சர் பேராசிரி...
புத்தாண்டு காலப்பகுதியில் பட்டாசு உட்பட கேளிக்கை வெடிபொருட்களின் விற்பனைகள் பாரியளவில் வீழ்ச்சி - பட...