52 வயதான குடும்பஸ்தர் தூக்கிட்டுத் தற்கொலை!

சாவகச்சேரியில் 52 வயதான குடும்பஸ்தரொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகச் சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர்.
சாவகச்சேரி மகாத்மாகாந்தி வீதியில் வசித்து வரும் மேற்படி குடும்பஸ்தர் சாவகச்சேரிச் சந்தையில் வியாபார நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், குறித்த குடும்பஸ்தர் நேற்றைய தினம் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கோபாலசிங்கம் ரவிச்சந்திரன்(வயது-52) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளவராவார். யாழ்.போதான வைத்தியசாலையில் இடம்பெற்ற மரண விசாரணைகளைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட குடும்பஸ்தரின் சடலம் இன்றைய தினம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரிப் பொலிஸார் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
சிவனொளிபாத மலைக்கு சிறப்பு புகையிரத சேவை!
எதிர்வரும் 11 ஆம் திகதிமுதல் ஊரடங்டகுச் சட்டத்தை கட்டுப்பாடுகளுடன் தளர்க்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச...
எரிபொருள் பௌசர்கள் மற்றும் ரயில்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது - அமைச்சர் கஞ்சன விஜேசேக...
|
|
கடந்த 10 நாட்களில் 500 இற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பலி - அரசாங்கத் தகவல் திணைக்கள தகவல்கள் ...
பல்வேறு அச்சுறுத்தல்கள் உள்ளதால் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படாது - அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீ...
நீதிபதிகளின் சம்பளத்தில் வருமான வரியை அறவிடுவதை தடுக்கும் வகையில் விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை...