30 வருட சந்தேகத்திற்கு கிடைத்த பதில்!

Tuesday, May 10th, 2016

ஏறத்தாழ30 வருடங்களாக இருந்த சந்தேகத்திற்கு இப்போதுதான் பதில் கிடைத்துள்ளது.

ஆம், அவுஸ்திரேலிய ஆய்வுகள் மொமைல் போனுக்கும், புற்றுநோய்க்கும் எந்தவகையிலும் தொடர்பில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளனர்.

இதற்காக அவர்கள் 1982 தொடக்கம் 2013 வரை சுமார் 30 வருட தரவுகளை சேகரித்து ஆராய்ந்துள்ளனர்.

அத்தரவுகளின்படி ஆண்களில் புற்றுநோய் வீதம் சிறிதளவில் அதிகரித்திருந்தாலும் பெண்களில் மாற்றமில்லாதிருந்தது அவதானிக்கப்பட்து. அத்துடன் இவ் வீதம் மொமைல் போன் பாவனைகளுக்கு முற்பட்ட கால தரவுகளை ஒத்திருந்தது.

இதனால் மூளையில் ஏற்படும் புற்றுநோய்க்கும், மொமைல் போன் பாவனைக்கும் தொடர்பில்லாதது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக சுமார் 19, 858 ஆண்களினதும், 14, 222 பெண்களினதும் தரவுகள் சேகரிக்கப்பட்டிருந்தது.

Related posts: