3 நாட்கள் காய்ச்சலில் குடும்பத்தலைவர் சாவு!

Tuesday, January 16th, 2018

மூன்று நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த குடும்பத் தலைவர் ஒருவர் உறக்கத்திலையே உயிரிழந்துள்ளார்

கோணாவளை வீதி, கொக்குவிலை சேர்ந்த பொன்னையா பிரபாகரன் (வயது -49) என்ற ஜந்து பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .

அவர் கடந்த மூன்று நாள்களாக தொடர் காய்ச்;சலால் பீடிக்கப்பட்டுள்ளார் வீட்டிலேயே மருந்தை உட்கொண்டு மருத்துவ உதவி பெறாது இருந்துள்ளார் நேற்று முன்தினம் இரவும் உணவு உண்டுவிட்டு உறங்கியுள்ளார். கணவன் நீண்ட நேரமாகியும் எழுந்திராததால் இவரது மனைவி நேற்று காலை அவரை எழுப்பியுள்ளார் அவர் எழுந்திருக்கவில்லை அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளளனர். அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர் என்று கூறப்பட்டது .

Related posts: