2 -1/2  தசாப்தத்தின் பின்னர் திறக்கப்பட்ட வறுத்தலை விளான் பாடசாலை!

Thursday, May 26th, 2016

யாழ்ப்பாணம் வறுத்தலைவிளான் அமெரிக்க மிஷன் தமிழ்க்கலவன் பாடசாலை நேற்று புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஏப்பரல் 10 ஆம் திகதி அன்று இராணுவத்தின் உயர்பாதுகாப்பு வலையத்திலிருந்து இருபத்து ஐந்து ஆண்டுகளின் பின்னர் விடுவிக்கப்பட்ட குறித்த பாடசாலை புனரமைக்கப்படாமல் பற்றைள் வளர்ந்து காணப்படுகின்றன.

இந்த நிலையில் குறித்த பாடசாலை புனரமைக்கப்பட்டு நேற்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பாடசாலையில் அயல்பகுதி மாணவர்கள் கற்றல் நடவடிக்கைகளில் இணைந்துகொள்ள முடியும் என பாடசாலை சமூகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பாடசலை மேலும் திறம்பட இயங்க வேண்டுமாயின் அயல் பகுதிகளும் விடுவிக்கப்பட்டு அங்கும் மக்கள் மீள்குடியமர அனுமதிக்கப்படல் வேண்டும் எனவும். இவ்வாறு மீள குடியமர அனுமதிக்கப்படுவதன் மூலமே பாடசாலையில் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு சிறந்த கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனவும் பாடசாலை சமூகத்தினரால் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: