137 ஆண்டுகளுக்குப் பின் காலநிலையில் மாற்றம் – நாசா
Tuesday, April 18th, 2017தற்போது இலங்கை இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் அதிகளவிலான வெப்பநிலை காணப்படுகின்றது.இந்த நிலையில், கடந்த 137 ஆண்டுகளிலேயே அதிக வெப்பம் நிலவிய இரண்டாவது மாதமாக மார்ச் மாதம் பதிவாகியுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.
பல நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட புள்ளிவிபரங்களின் அடிப்படையிலேயே இந்த அறிக்கையினை அமெரிக்க வானவியல் ஆராய்ச்சி மையமான நாசா வெளியிட்டுள்ளது. அந்த புள்ளி விபரங்களின் படி கடந்த 137 ஆண்டுகளில் வெப்பம் மிகுந்த 2 ஆவது மாதமாக 2017ஆம் ஆண்டின் மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பதிவாகியிருந்த வெப்பநிலையை விட 0.15 டிகிரி வெப்பம் குறைவாக காணப்படுவதாக நாசா மேலும் தெரிவித்த்துள்ளது.
Related posts:
கால்நடைகளைக் கட்டி நெற்செய்கைக்கு உதவுக! விவசாயிகள் தரப்பில் கோரிக்கை!
பனை வெல்லங்களை கொள்வனவு செய்வதில் புலம்பெயர் மக்கள் ஆர்வம் - சங்கத்தின் பொதுமுகாமையாளர்!
பிரதமர் தனது பதவியை இராஜினாமா செய்ய எந்த தீர்மானமும் எடுக்கவில்லை – வெளியாகும் தகவலில் உண்மையில்லை எ...
|
|