100 ஏக்கர் நிலப்பரப்பில் நண்டு வளர்ப்பு!

அம்பலாந்தொட்ட பிரதேசத்தில் நண்டுகளை வளர்ப்பதற்கான திட்டமொன்றை முன்னெடுப்பதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கடற்தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதற்காக அம்பலாந்தொட்ட நுணம வாவிக்கு அருகாமையில் 100 ஏக்கர் நிலப்பரப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக பத்து கோடி ரூபா நிதி வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்திருப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதற்கான திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்றும் மேலும் அமைச்சர் கூறினார்.
Related posts:
மட்டுவில் அம்மன் கோவிலுக்கு சென்ற பெண் விபத்தில் மரணம்!
இத்தாலி பயணமானார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச – பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் இராஜதந்திர சந்திப்புகளிலும...
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள சேவைகள் நாளைமுதல் முன்னெடுப்பு!
|
|