ஹம்பாந்தோட்டை உப்பு நிறுவனம் கடந்த இரண்டு வருடத்தில் 99 கோடி வருமானம்!
Tuesday, January 3rd, 2017
ஹம்பாந்தோட்டை உப்பு நிறுவனம் கடந்த இரண்டு வருடத்தில் 99 கோடி ரூபாவை இலாபமாக பெற்றுள்ளதாக அதன் தலைவர் அயுப் கான் தெரிவித்துள்ளார்.
அரசாங்க திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
330 மில்லியன் ரூபா நட்டமடைந்த இந்த நிறுவனம் தற்போது இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய விநியோகஸ்தர் எண்ணிக்கையை 60 என்ற அளவில் அதிகரித்தல், ஊழியர் பிரச்சினையை தீர்த்தல், நல்ல திட்டம் உள்ள அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளும் செயற்பாடுகளின் ஊடாக இவ்வளவு பெரிய இலாபம் ஈட்ட முடிந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
Related posts:
தொற்றுறுதியான நபருக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின்...
டிக்கட் இன்றி ரயிலில் பயணித்தோரிடமிருந்து 03 மணி நேரத்தில் மூன்று இலட்சத்து 78,000 ரூபா வருமானம் - ப...
நாடு முழுவதும் நவீன வர்த்தக கைத்தொழில் மயமாக்கல் – இதுவே அடுத்த 20 வருடங்களில் துரித அபிவிருத்திக்கு...
|
|