வைத்தியர்களின் கவனயீனம் – ஒருவர் உயிரிழப்பு?
Tuesday, April 18th, 2017
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைத்தியர்களின் கவனயீனம் காரணமாக விசேட தேவையுடைய ஒருவர் நேற்று (17) உயிரிழந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சுகயீனம் காரணமாக ஞாயிற்றுக்கிழமை (16) இரவு மணற்காட்டு பகுதியைச்சேர்ந்த விசேட தேவையுடைய 45 வயதுடைய ஆண், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும், திங்கட்கிழமை (17) வரை குறித்த நபருக்கு சிகிச்சைகள் வழங்கப்படவில்லை. இந்நிலையில், திங்கட்கிழமை (17) அவர் உயிரிழந்துள்ளார். இதனைத்தொடர்ந்து, குறித்த நேரத்தில் கடமையிலிருந்த வைத்தியர்கள் சட்ட வைத்திய அதிகாரியின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.
Related posts:
மேலும் ஆறு புதிய கட்சிகள்!
கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 260 ஆக அதிகரிப்பு!
உலகின் தலைசிறந்த 20 விஞ்ஞானிகளில் இரண்டு இலங்கைர்கள் -“Research.com” நடத்திய ஆய்வில் தகவல்!
|
|