வெளிநாட்டு பறவைகளை வேட்டையாடியவர் கைது!
Wednesday, April 27th, 2016
மிருசுவில் பகுதியிலுள்ள களப்புக்கு இரைதேடி வந்த வெளிநாட்டு கொக்குகள் 10ஐயும் வேட்டையாடி, அதன் இறைச்சிகளை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற நபரை, நேற்று (26) மாலை கொடிகாமம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வரணி குடமியன் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
களப்புக்கு வரும் வெளிநாட்டு கொக்குகளை பொறி வைத்துப் பிடித்த மேற்படி நபர், அவற்றின் தோல்களை உரித்து இறைச்சியாக்கிக் கொண்டிருப்பதை அவதானித்த ஒருவர், அது தொடர்பில் பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்துள்ளார்.
இதன் பின்னர், சந்தேக நபர் இறைச்சிகளை மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்லும் போது, கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
குடாநாட்டில் கொள்ளையில் ஈடுபட்ட நால்வர் கைது!
பலியானவர்களின் எண்ணிக்கை 26ஆக அதிகரிப்பு!
ஆசியாவிலேயே ஜனநாயகத்தை முழுமையாகப் பாதுகாத்த ஒரே நாடு இலங்கை - இலங்கையின் முதலாவது தேசிய மாணவர் நாடா...
|
|
|
மாணவர்களை தடுப்பூசி பெற்றுக்கொள்ள தயார்ப்படுத்துங்கள் – பெற்றோருக்கு சுகாதார அமைச்சு அறிவுறுத்து!
இறக்குமதி செய்யப்பட்டுள்ள சமையல் எரிவாயுவின் தரம் குறித்து ஆராய நடவடிக்கை - இராஜாங்க அமைச்சர் லசந்த ...
தொடரும் கனமழை – அதிகரிக்கும் வெள்ளம் - வடக்கு மாகாணத்தில் 64 ஆயிரம் ஹெக்ரயார் நெல் வயல்கள் பாதிப்பு...


