வெளிநாடுகளில் சிக்கியிருந்த இன்றும் 305 இலங்கையர்கள் நாடுதிரும்பினர்!

Tuesday, August 18th, 2020

ஜோர்தான் மற்றும் கட்டாரிலிருந்து 305 இலங்கையர்கள் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

அதன்படி டோஹாவிலிருந்து கட்டார் ஏயர்வேஸ் விமான சேவைக்கு சொந்தமான QR-668 என்ற விமானத்தில் பணிபுரியும் 20 இலங்கையர்கள் இன்று அதிகாலை 1.40 மணியளவில் நாடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை ஜோர்தானின், அம்மானிலிருந்து இலங்கை ஏயர்லைன்ஸ் நிறுவன விமானம் மூலமாக 285 இலங்கையர்கள் இன்று அதிகாலை 4.35 மணிக்கு கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

மேலும் விமான நிலையத்தை வந்தடைந்த அனைவரும் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

Related posts:

20 வது திருத்தம் நாடாளுமன்றத்தில் செப்டம்பரில் சமர்பிக்கப்படும் - நீதி அமைச்சர் அலி சப்ரி நம்பிக்கை!
வரிச் சலுகைகள் அரசுக்கு பாதிப்பை ஏற்படுமென கூறுபவர்கள் பொருளாதார முகாமைத்துவம் பற்றி அறியாதவர்கள் -...
நடைறையிலுள்ள ஒன்பது மாகாணங்களுக்கு பதிலாக மூன்று மாகாணங்களை உருவாக்க நிபுணர்குழு யோசனை - சரத் வீரச...