வெசாக் தினத்தை முன்னிட்டு யாழில் மரவள்ளிக் கிழங்குத்  தானம்

Thursday, May 11th, 2017

வெசாக் போயா தினத்தை முன்னிட்டு வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே தலைமையில் வடமாகாண ஆளுநர் செயலக உத்தியோகத்தர்களால் மரவள்ளிக் கிழங்குத் தானம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

வடமாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாகப் பிரத்தியேக பந்தல் அமைக்கப்பட்டு முற்பகல்-10 மணி முதல் பிற்பகல் வரை மரவள்ளிக் கிழங்கு அவிக்கப்பட்டுத் தானம் செய்யப்பட்டது. இந்தத் தானம் வழங்கும் நிகழ்வில் பலரும் கலந்து கொண்டு நன்மையடைந்துள்ளனர்.

Related posts: