வீரவங்சவின் பிணை விண்ணப்பம் நிராகரிப்பு!
Monday, April 3rd, 2017பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவின் பிணை விண்ணப்பம் கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
அவர் கடந்த ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த போது, அரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு, கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், அவரால் முன்வைக்கப்பட்ட பிணை விண்ணப்பத்தை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்ததைத் தொடர்ந்து, விமல் வீரவங்ச சிறைச்சாலையினுள் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டார். எனினும் அவர் அண்மையில் உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ள நிலையில், இன்று அவர் முன்வைத்த பிணை விண்ணப்பத்தை கோட்டை நீதவான் நீதிமன்றமும் நிராகரித்துள்ளது.
Related posts:
வடக்கில் பல்வேறு பகுதிகளிலும் மின்தடை!
அரச உடமையாக்கப்பட்ட உணவுப் பொருட்கள் மானிய விலையில் மக்களுக்கு வழங்க அமைச்சரவை அங்கீகாரம்!
2022 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்களிப்பு நாளை!
|
|