வீதி விபத்தில் இளைஞன் படுகாயம்!
Thursday, December 29th, 2016வீதியால் நடந்து சென்ற இளைஞன் மீது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் அவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று மாலை 5 மணியளவில் நீர்வேலிச்சந்திப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதில் நீர்வேலி தெற்கினை சேர்ந்த சிவலிங்கம் கஜேந்திரன் (வயது 25) என்ற இளைஞனே படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்தவர் கோப்பாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் பொலிஸில் முறையீட்டதையடுத்து தொடர்ந்து பொலிஸார்’ விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Related posts:
இரு தினங்களில் 7 பேர் விஷக்கடிக்கு இலக்கு - தென்மராட்சியில் அச்சம்!
அத்தியவசிய சேவை ஊழியர்களுக்காக விசேட ரயில் சேவை - ரயில் போக்குவரத்து அத்தியட்சிகர் தெரிவிப்பு!
அரிசி ஆலை உரிமையாளர்களால் அறிவிக்கப்பட்ட அரிசி விலை நியாயமற்றது - இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன ...
|
|