வீட்டுக்குள் புகுந்து தீ வைத்தவரை அடையாளம் காட்டியது மோப்பநாய் – கோண்டாவிலில் சம்பவம்!

Thursday, November 17th, 2016

யாழ்ப்பாணம் கோண்டாவில் இராமகிருஷ்ணா பாடசாலைக்கு அருகில் வீட்டுக்குள் புகுந்து உடைமைகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. அவ்வாறு கொழுத்தியவர் என்று சந்தேகிக்கப்படுபவரின் பாதணி சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்ட நிலையில், மோப்ப நாயின் உதவியுடன் விசாரணை மேற்கொண்டதிலிருந்து ஒருவரைக் கைது செய்ததாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வணிகர் ஒருவரின் வீட்டில் கடந்த சனிக்கிழமை பகல் வீட்டில் யாரும் இல்லாத நேரம் தீ வைக்கப்பட்டது. சுமார் 3லட்சம் ரூபா பெறுமதியான பொருள் இழப்பு ஏற்பட்டது. வெளியே சென்றவர்கள் வீடு திரும்பியபோது சம்பவத்தைக் கண்டு பொலிஸாருக்கு முறையிட்டனர். அங்கு பொலிஸார் தேடுதல் நடத்தினர். இனம்தெரியாதவர் ஒருவர் வீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்த உடமைகளைத் தீயிட்டுக் கொளுத்தியதாகச் சந்தேகிக்கப்பட்டது. தீயிட்டவர் என்று சந்தேகிக்கப்படுபவரின் பாதணி ஒன்று மீட்கப்பட்டது. அதனடிப்படையில் அர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் சம்பவ இடத்தில் மோப்பநாய் சகிதம் தேடுதல் நடத்தப்பட்டது. மோப்பநாயும் சந்தேக நபரின் இல்லத்திற்கே சென்று அடையாளப்படுத்தியது என்று பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர் விசாரணையின் பின்னர் நீதிவானிடம் முற்படுத்தப்பட்டார். அவரை எதிர்வரும் 24ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

 fire-2

Related posts: