விரைவில் அமைச்சரவையில் மாற்றம் ?

Saturday, October 29th, 2016

அமைச்சரவையில் மாற்றம் செய்வது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் நாட்களில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சிவில் அமைப்புக்களுக்கு உறுதியளித்துள்ளார். இது பற்றி, நீதியான சமூகத்திற்கான அமைப்பின் அழைப்பாளர் பேராசிரியர் சரத் வீஜேசூரிய தெரிவித்துள்ளார்.

சில முக்கிய அமைச்சர்களுக்கு எதிராக பாரிய மோசடி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் சில அமைச்சுக்கள் உரிய முறையில் செயற்படுவதில்லை எனவும் இதனால் அமைச்சரவையில் மாற்றம் செய்யுமாறு கோரி மகஜர் ஒன்று ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மாளிகையில் அண்மையில் ஜனாதிபதியை சந்தித்த போது இந்த மகஜர் வழங்கப்பட்டுள்ளது. சில முக்கிய அமைச்சர்கள் பாரிய மோசடிகளில் ஈடுபட்டதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவற்றை நிரூபிக்கக்கூடிய காரணிகளும் காணப்படுவதாக பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேசி சில அமைச்சர்கள் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்தார் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

President Mahinda Rajapakse delivered his speech in parliament, announcing the final defeat of the Tamil Tigers, even as the rebels insisted their leader was still alive, and vowed to fight on for a Tamil homeland.
President Mahinda Rajapakse delivered his speech in parliament, announcing the final defeat of the Tamil Tigers, even as the rebels insisted their leader was still alive, and vowed to fight on for a Tamil homeland.

Related posts: