விமான நிலைய மின் தடையால்  பயணிகள் அவதி!

Tuesday, November 15th, 2016

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளியேறும் முனைய பகுதியில் குளிரூட்டி சாதனம் இயங்காத காரணத்தினால், பயணிகள் சுமார் 4 மணிநேரம் பெரும் அசௌகரியத்தை எதிர்நோக்கியதாக தெரியவருகிறது.

மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், குளிரூட்டி சாதனங்கள் செயலிழந்துள்ளன.

குளிரூட்டிகளுக்கு மின்சாரத்தை வழங்க பொருத்தப்பட்டிருந்த மின்பிறப்பாக்கி இயந்திரங்களும் இயங்கவில்லை என்பதால், இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன் மின்சாரத்தை வழங்க 4 மின்பிறப்பாக்கி இயந்திரங்கள் விமான நிலையத்தில் இருந்த போதிலும் அவற்றில் ஒன்று மாத்திரமே நேற்றைய தினம் இயங்கியுள்ளது.

katu

Related posts: