விமானங்களை விற்பனை செய்யும் ஸ்ரீலங்கன் விமான நிறுவனம்?

ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்திற்கு சொந்தமான நான்கு விமானங்கள் விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரான் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
A 350 வர்க்கத்தைச் சேர்ந்த நான்கு விமானங்களே இவ்வாறு விற்பனை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை குறித்த நான்கு விமானங்களுள் ஒரு விமானம் தற்போது குத்தகை நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஸ்ரீ லங்கன் விமான நிறுவனம் 3.25 பில்லியன் டொலர் கடன் சுமையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அர்ஜுன் மகேந்திரனுக்கு தண்டனையா?
அனுராதபுரத்தில் ஐஸ் மழை
யாழ். அச்சுவேலி மத்திய கல்லூரியில் கணினி உபகரணங்கள் இனந்தெரியாதோரால் கொள்ளை!
|
|